இணைய செய்திகள்
கொண்டம் செக்ஸ் கிரீமால் உயிர் பிழைத்த பூனைக்குட்டி: ஆச்சரியம் !
பிறந்து 10 வாரங்களே ஆன பூனைக் குட்டி ஒன்றை, செக்ஸ்சுக்கு பயன்படுத்தும் கிரீம் கொண்டு காப்பாற்றியுள்ளனர் என்றால் ஆச்சரியம் தான். குறிப்பிட்ட இப் பூனைக்குட்டி விளையாடும் போது, வீதியில் நின்ற கார் ஒன்றின் சில்லில் உள்ள ஓட்டை ஒன்றில் தலையை விட்டுவிட்டது. தலையை திரும்பி வெளியே எடுக்க முடியாமல் அது திணறியுள்ளது. இதனைப் பார்த்த சிலர் மிருகங்களைக் காப்பாற்றும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். அங்கே வந்த அவர்கள் புனையின் நிலையைக் கண்டு கதிகலங்கி விட்டனர். காரணம் காரின் சில்லு [...]
உலகநாடுகளை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவில் நடக்கும் கேவலம் ! (காணொளி இணைப்பு)
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது. உலகநாடுகளை ஆட்டிப்படைக்கும் மற்றும் பெரும் செல்வந்த நாடு எனக் கருதப்படும் அங்கே கொலை கொள்ளைகள் மற்றும் அடாவடிகள் என்பன மிக மலிவாகப் போய்விட்டன. நியூயோர் புறநகர்ப் பகுதி ஒன்றில் மலசல கூடத்துக்குள் சென்ற 14 வயதுச் சிறுவன் ஒருவனின் கண்ணாடியை(கூலிங் கிளாஸை) பறிக்க 3 பேர் கொண்ட கும்பல் முனைந்துள்ளது. அச் சிறுவன் அணிந்திருந்த கண்ணாடியை இலகுவாகப் பறித்துக்கொண்டு இவர்களால் ஓடமுடியும். இருப்பினும் அச்சிறுவனை [...]
யாழ் கலாச்சார பிறழ்வுக்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே காரணம்!
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிசுக்கொலைகள் மற்றும் கருக்கலைப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணத்தை விட வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிலைய வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் சட்டத்தற்கு முரணான அல்லது தவறான பாலியல் தொடர்புகளே எனவும் அவர் குறிப்பிட்டார். அது தவிர சிறுவயது கர்ப்பம் அடைதல் போன்ற சம்பவங்களினால் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகின்ற இவ்வாறானவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிராபத்தையும் எதிர்நோக்கி வருவதாக [...]
இலங்கை அரசின் போர்க் குற்றம்! மேலும் புகைப்படங்கள் வெளியீடு!! – (படங்கள் இணைப்பு)
இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பல ஆதாரமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்திருந்தன. இவ்வாறு வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அரச தரப்பை ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது. இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேலும் சில ஆதாரப் [...]
லண்டனில் மகிந்தவுக்கு எதிராக ஆர்பாட்டத்தை ஒழுங்குசெய்தது யார்: புலனாய்வினர் ?
பிரித்தானியாவில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் யார், என்பதை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இதில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர், சுரேன் சுரேந்திரன், மற்றும் லேபர் கட்சியின் தமிழ் பிரமுகர் சென் கந்தையா போன்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இப் போராட்டம் லண்டனில் நடைபெறும் வேளை திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருந்தார். மற்றும் இமானுவேல் அடிகளார் லண்டனில் இருக்கவே இல்லை. [...]
அழுத்தங்களுக்கு மத்தியில் சந்தித்த மகிந்த! (படங்கள் இணைப்பு)
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்கள், முக்கிய விடயமாக பலராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், புனித பாப்பரசரை சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவரின் சவால்மிகுந்த பிரித்தானியப் பயணத்தினைத் தொடர்ந்து, வற்றீக்கானுக்கான பயணம் அமைந்திருந்தது. அண்ணளவாக 30 நிமிடங்கள் வரை அமைந்த இந்தச் சந்திப்பின் போது, நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தணித்து, சமூக – பொருளதார அபிவிரித்தி [...]
அரவிந்தசாமி போல மாப்பிளையும் ஐஸ்வர்யாராய் போல பொண்ணுகேட்ட வங்களுக்கும் ஓர் எச்சரிக்கை !
நீங்கள் பெண்களாக இருந்து ஒல்லியான மாப்பிளையையும், ஆண்களாக இருந்தால் ஒல்லி பெம்பிளையையும் தேடுகின்றீர்களா? ஒல்லியை நம்பாதீங்க. உடனேயே குண்டாகிடுவாங்க. உலக அழகி ஐஸ்வர்யாவைப் போல பெண் வேணும் என காத்திருக்கும் ஆண்களும் அழகு நாயகன் அரவிந்தசாமியைப் போல ஆம்பிளை வேணும் என காத்திருக்கும் பெண்களும் இந்தப் படங்களை பார்த்துட்டு முடிவு எடுங்கோப்பா. ஒல்லி மாப்பிளையும், ஒல்லி பெம்பிளையையும் நம்பவே கூடாது.
கனடா ஓவியரின் பரிசை பார்த்து வியந்து போன ராணி எலிசபெத் !
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் அரசியாரின் மிகப்பெரிய ஓவியத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.அரண்மனையின் ஒயிட் டிராயிங் அறையில் 320 X 224 செ.மீ அளவில் வரையப்பட்ட பெரிய ஒவியத்தின் திறப்பு விழாவில் கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஓவியம் ரிடியூ ஹாரின் அலங்கார வாயிலின் முன்பு அரசியார் நிற்பது போல வரையப்பட்டுள்ளது. அவருக்குப் பின்பக்கம் அவரது பாட்டியார் விக்டோரியா ராணியின் ஓவியம் [...]
பிரிந்த எஜமானி மீண்டதால் பாச மழை பொழியும் அதிசய நாய் !
வளர்ப்புப் பிராணிகளில் அதிகளவு நன்றியினைக் கொண்ட பிராணி நாய் என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அந்தளவிற்கு நன்றிக்கடனை செலுத்தும் ஆற்றல் கொண்டது. இப்படிப்பட்ட நாய் ஒன்று நீண்ட காலமாக தன்னை விட்டுப் பிரிந்து அமெரிக்க வான்படையில் பணியாற்றிய தனது எஜமானியார் விடுமுறையில் வீடு திரும்பியதும் தொலைந்த பிள்ளையை மீட்டெடுத்த தாயைப் போல பாசமழை பொழிந்து தள்ளியுள்ளது.
ஜந்துகளை உயிருடன் உண்ணும் காட்டுபிராண்டி பெண் !
சாப்பாட்டு பிரியர்களை பார்த்திருப்பீர்கள். ஏன் விதம் விதமாக சாப்பிட வேண்டும் என்று நாம் கூட நினைப்போம் இது யதார்த்தம். இங்கு ஒரு பெண்மணியின் ஆசையோ ரொம்பவே விபரீதமானதாக உள்ளது. தாய்லாந்தின் காட்டில் உள்ள பறக்கும் மற்றும் ஊர்ந்து திரியும் ஜந்துகளை உயிருடன் அப்படியே உண்ணுகிறார் பாருங்கள். நாம் பப்படம் ரசித்து சாப்பிடுவது போன்று இந்த பெண் இவைகளை உண்ணுகிறார்.
இணைய செய்திகள்
© 2012. Vanni Media Network. All Rights are reserved.